நெடுஞ்சாலை துறை கணக்காளர் பணி தேர்வு முறைகேடு – நீதிமன்றம் புதிய உத்தரவு!!
நெடுஞ்சாலை துறை மண்டல கணக்காளர் பணிக்கு நடத்திய தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு முறைகேடு:
கடந்த 2016ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலை துறை மண்டல கணக்காளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடுகள் இருப்பதாக கூறி, அது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். தேர்வில் தேர்வான 10 பேரின் தேர்ச்சியை அரசு செயலாளர் ரத்து செய்ய பரிந்துரை செய்தார். ஆனால் நெடுஞ்சாலை இயக்குனர் 8 பேரின் தேர்ச்சியை மட்டுமே ரத்து செய்து இருந்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வீட்டில் இருந்தே வேலை!!
வழக்கு விசாரணை:
இது குறித்து முழுமையான சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதிகள் முன்பு வந்தது. அதில் தலைமை கணக்காளர் சார்பில் உள்ள வழக்கறிஞர் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உண்மை எனவும், 16 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நடவடிக்கை:
அரசு வழக்கறிஞர், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்