மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் அதிரடி உயர்வு – சூப்பர் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் புத்தாண்டிற்குள் ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை சட்டப்பேரவை கூட்டத்தில் சம்பள உயர்வை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளனர்.
சம்பள உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வபோது பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்கப்பட்டது. அதாவது குறைந்தபட்ச ஊதியம் ரூ.6000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் புத்தாண்டன்று ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – இனி இவர்கள் பொருட்கள் வாங்க முடியாது!
இதனை தொடர்ந்து நாளை ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் தொகை 2.57 சதவீதம் என்கிற அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் ஃபிட்மென்ட் தொகையை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்கப்பட்டால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000லிருந்து ரூ.26, 000 வரைக்கும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download
ஃபிட்மென்ட் காரணி 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால் ரூ.8000 வரைக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் தற்போது ரூ.18,000 ஆக இருப்பின் 2.57 சதவீதம் என்ற அடிப்படையில் ஊழியரின் சம்பளம் ரூ. 46,260 ஆக இருக்கும். ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக இருந்தால் ஊழியரின் சம்பளம் ரூ. 95,680 ஆக இருக்கும். புத்தாண்டுக்குள் ஊழியரின் சம்பளம் அதிகரிக்கவுள்ளதால் ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.