Post Office கணக்கு தொடங்கவுள்ளோர் கவனத்திற்கு – அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்கள்!

0
Post Office கணக்கு தொடங்கவுள்ளோர் கவனத்திற்கு - அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்கள்!
Post Office கணக்கு தொடங்கவுள்ளோர் கவனத்திற்கு - அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்கள்!
Post Office கணக்கு தொடங்கவுள்ளோர் கவனத்திற்கு – அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்கள்!

இந்திய அஞ்சல் துறை அண்மையில் சில திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இதனால் சேமிப்பு திட்ட கணக்குதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், அதிக லாபம் தரும் சேமிப்பு திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

Post Office சேமிப்பு திட்டம்:

இந்தியாவில் தற்போது பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தி உள்ளது. அந்த வகையில் SBI வங்கி 5.65 சதவீதமும், HDFC வங்கி 6.10 சதவீதமும், AXIS வங்கி 6.05 சதவீதமும், PNB வங்கி 6.10 சதவீதமும் வட்டியை உயர்த்தியுள்ளது. அதனை தொடர்ந்து அஞ்சல் துறையும் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி அளிக்கப்பட்டு வருகிறது. தபால் நிலைய சேமிப்பு திட்டமான இதில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இத் திட்டத்தில் இணையலாம்.

இத்திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கு, வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 80 C-யின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகையும் உண்டு. அடுத்தாக அதிக லாபம் தரும் சேமிப்பு திட்டத்தில் ஒன்றாக உள்ளது பொது வருங்கால வைப்பு நிதி ஆகும். இதில் முதலீட்டாளர் 4ம் ஆண்டிற்கு பிறகு தனது முதலீட்டு தொகையில் இருந்து கடன் பெறும் வசதி உண்டு அத்துடன் 7ம் ஆண்டில் இருந்து முதலீட்டு தொகையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான நிதியை திரும்பப் பெறவும் முடியும்.பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யும் நபருக்கு 7.1 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

புது சமையல் ஆர்டரால் மகிழ்ச்சி அடையும் கதிர் & முல்லை – பாண்டியன் ஸ்டோர்ஸ் திருப்பம்!

அதனை தொடர்ந்து பெண்களுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டியை வழங்குகிறது. பெண் குழந்தை 18 வயதை நிறைவு செய்யும் போது கல்வி, திருமணம் போன்ற செலவுகளுக்காக 50 சதவீத சேமிப்பை முன்கூட்டியே பெறும் வசதி இத்திட்டத்தில் உள்ளது . இத்திட்டத்தை தொடங்க 10 வயதுள்ள பெண் குழந்தையின் பெயரில் 25 ரூபாய் முதல் 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மேலும் இதில் வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 80 C-யின் கீழ் வரிச் சலுகையும் உண்டு.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!