வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – FD கணக்குகளுக்கு அதிக வட்டி!
பஞ்சாப் நேஷனல் வங்கி வயது முதிர்ந்தவர்களுக்கு என்று தொடங்கப்பட்டுள்ள வைப்பு நிதி கணக்குகளுக்கு அதிக அளவிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. இது பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
வட்டி விகிதம்:
அதிக அளவிலான மக்கள் தங்கள் முதலீடுகளுக்கு பாதுகாப்பை மட்டுமே பிரதானமாக நினைக்கின்றனர். சிலர் அதிக வட்டியை எதிர்பார்க்கின்றனர். நிலையான வைப்பு நிதி கணக்கில் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவிலான வட்டியை நிர்ணயிக்கிறது. வங்கிகள் தங்களது திட்டங்களுக்கான கால அளவு முதல் சில வரைமுறைகளையும் வகுத்துள்ளனர். இவற்றில் மக்களுக்கு எவை வசதியாக உள்ளதோ அவற்றை தேர்வு செய்து கொள்ளலாம். தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி வைப்பு நிதி கணக்குகளுக்கு புதிய வட்டியை நிர்ணயித்துள்ளது.
அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு சீனியர் சிட்டிசன் என்ற அடிப்படையில் கூடுதலான சலுகைகளுடன் அதிக வட்டியை வழங்குகிறது. அதிலும் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி வைப்பு நிதி கணக்கிற்கு வட்டி விகிதத்தை மாற்றி அமைத்து அறிவித்துள்ளது. இந்த மாற்றமானது மே 7ம் தேதி வருகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சமாக 3% வட்டி முதல் அதிகபட்சமாக 5.25% வட்டி வழங்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு குறைந்தபட்சமாக 3.5% வட்டியும், அதிகபட்சமாக 5.75% வட்டியும் வழங்கப்படுகிறது.
புதிய வட்டி விகிதம்:
7 – 14 நாட்கள் : 3%
15 – 29 நாட்கள் : 3%
30 – 45 நாட்கள் : 3%
46 – 90 நாட்கள் : 3.25%
91 – 179 நாட்கள் : 4%
180 – 270 நாட்கள் : 4.5%
271 நாட்கள் – 1 ஆண்டு : 4.5%
1 ஆண்டு : 5.1%
1 ஆண்டு – 2 ஆண்டு : 5.1%
2 ஆண்டு – 3 ஆண்டு : 5.1%
3 ஆண்டு – 5 ஆண்டு : 5.25%
5 ஆண்டு – 10 ஆண்டு : 5.25%