தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?
அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தங்கம் விலையானது அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.37,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை:
தமிழக மக்களுக்கு தங்க நகை என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. தங்க நகையை வெறும் அழகுக்காக போடும் ஆபரணமாக நினைக்காமல் அதை மக்கள் ஒரு நல்ல முதலீட்டாக நினைக்கின்றனர். எத்தனை நகைக்கடைகள் வந்தாலும் அதில் மக்கள் கூட்டம் குறையாமல் தான் இருக்கிறது. ஒரு முறை நகை வாங்கி வைத்துக் கொண்டால் ஆபத்து நேரத்தில் அதை வைத்து பணம் ஈட்டலாம் என்பதால் மக்கள் தங்கம் மீது ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை என்பதால் நகைக்கடைகளில் புது புது டிசைன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் நடுத்தர மக்கள் கூட தீபாவளி என்றால் நகை வாங்க நினைக்கின்றனர். அதற்கு தகுந்தாற் போல விலையும் அமைகிறது. இந்நிலையில் கடந்த வாரம் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் மக்கள் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால் நேற்றும் இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
நாட்டில் 2000 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் – அரசின் புதிய திட்டம்!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் சென்னையில் இன்று (செப்.23) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.37,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.4,690க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.63.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் மக்கள் தங்க நகை வாங்க தயக்கம் காட்டி வந்தாலும் தீபாவளிக்குள் தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்து இருக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்