தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கான வழக்கு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கைகள் வைக்கப்பட்டு மனு அளிக்கப்பட்டது. தற்போது இது குறித்த முக்கிய தகவல் வந்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணிகளுக்கு தகுதித்தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடம் தேர்வானது 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்ட போட்டித்தேர்வை எழுத வேண்டும். தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கான TET முதல் தாள் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 தேர்வு தேதி எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில் தமிழகத்தில் 2011-ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை என கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
UIDAI : புதிய வசதி அறிமுகம் – இனி ஆதார் மையங்களை கண்டுபிடிப்பது ஈசி!!
Exams Daily Mobile App Download
இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் சட்டத்தின் படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்