தமிழகத்தில் மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் – நீதிமன்றம் உத்தரவு!

0
தமிழகத்தில் மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் - நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் - நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் – நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் நேரடி வகுப்புகளுக்கு வர சொல்லி கட்டாயபடுத்தும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் தொடர்ந்து கற்க வேண்டும் என்ற நோக்கில் ஆன்லைன் & கல்வி தொலைக்காட்சிகள் மூலமும் தினசரி வகுப்புகள் நடைபெற்றது. மேலும் 2020 – 2021ம் கல்வியாண்டில் அனைவரும் ஆல்பாஸ் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மேலும் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண் வழங்கப்பட்டது. இதன் பிறகு அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்ததை அடுத்து மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து – ICAI அறிவிப்பு!

அதனை தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1ம் தேதி தொடங்கி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத காரணத்தால் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் – தனித்து களமிறங்கும் தேமுதிக! விஜயகாந்த் அறிவிப்பு!

அதே போல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொற்று பரவும் என்ற அச்சத்தில் உள்ள பெற்றோர்கள் விரும்பினால் தங்கள் குழந்தைகளை நேரடி வகுப்புகளுக்கு அனுப்பலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. இந்நிலையில் சில பள்ளிகள் மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையில் மாணவர்களை வகுப்புகளுக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!