இனி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவது கஷ்டம் போலயே.. உயர்நீதிமன்றம் நோட்டீஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்துள்ள சர்ச்சையான விஷயம் குறித்து, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், மத்திய, மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், தொகுப்பாளர் ஆகியோர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி:
இந்தியாவின் முன்னணி சேனல்களில், 6 மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் வெளி உலகத்தில் எந்த வித தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரே வீட்டில், அங்கு கொடுக்கப்படும் டாஸ்குகளை செய்து வாழ வேண்டும் என்ற கான்செப்டில் தான் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 6 மொழிகளிலும், அந்தந்த மொழி திரைப்படங்களின் சூப்பர் ஸ்டார்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
Exams Daily Mobile App Download
போட்டியாளர்கள் செய்யும் பல விஷயங்கள் இதுவரை சர்ச்சைகளை கிளப்பி உள்ள நிலையில், தற்போதைய தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வரம்பு மீறி ஆபாசமாக நடந்து கொள்வது போல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதனால் வக்கீல் ஒருவர் ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருவதாக வழக்கு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
எல்லாம் கைமீறி போச்சு.. மணக்கோலத்தில் வெண்பாவும், பாரதியும்.. குமுறும் ரோஹித் – வைரல் அப்டேட்!
Follow our Instagram for more Latest Updates
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம், தொகுப்பாளர் நாகார்ஜுனா, மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நோடீஸ் அனுப்பியுள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படும் சூழல் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தகவல் பேசுபொருளாகி உள்ளது.