10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு நீதித்துறையில் வேலை ரெடி – Online விண்ணப்பங்கள் வரவேற்பு !
சென்னை உயர் நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Examiner, Reader, Xerox Operator போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | சென்னை உயர்நீதிமன்றம் (Chennai High Court) |
பணியின் பெயர் | Examiner, Reader, Xerox Operator and others |
பணியிடங்கள் | 33 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
நீதித்துறை பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள சார்நிலை பணிகளான Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff மற்றும் Xerox Operator ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Chennai High Court சம்பள விவரம்:
விண்ணப்பதாரர்களுக்கு தேர்வாகும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.16,600/- முதல் அதிகபட்சம் ரூ.71,900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் கல்வி விவரம்:
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பள்ளிகளில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த நீதித்துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Xerox Operator பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 6 மாத காலம் Xerox இயந்திரம் இயக்குவதில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Chennai High Court வயது விவரம்:
- இந்த நீதித்துறை பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- SC / ST – 05 ஆண்டுகள், OBC – 02 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் தேர்வு செய்யும் முறை:
இந்த நீதித்துறை பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
Chennai High Court விண்ணப்ப கட்டணம்:
இந்த நீதித்துறை பணிக்கு ரூ.550/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும், SC / ST பிரிவினர் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் விண்ணப்பிக்கும் வழிமுறை:
22.08.2022 என்ற இறுதி நாளுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் இப்பணிகளுக்கான விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.