நீதிமன்றங்களில் உள்ள 423 காலிப்பணியிடங்களுக்கு விரைவில் நியமனம் – மத்திய அமைச்சர் தகவல்!!

0
நீதிமன்றங்களில் உள்ள 423 காலிப்பணியிடங்களுக்கு விரைவில் நியமனம் - மத்திய அமைச்சர் தகவல்!!
நீதிமன்றங்களில் உள்ள 423 காலிப்பணியிடங்களுக்கு விரைவில் நியமனம் - மத்திய அமைச்சர் தகவல்!!
நீதிமன்றங்களில் உள்ள 423 காலிப்பணியிடங்களுக்கு விரைவில் நியமனம் – மத்திய அமைச்சர் தகவல்!!

நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைந்து நீதிபதிகளை நியமிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

நீதிபதி பணியிடங்கள்:

ஜனவரி 28ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே அவர்கள், உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் இது தொடர்பாக அனுப்பப்பட்ட பரிந்துரை பட்டியலை விரைந்து ஆய்வு செய்து கொலிஜியம் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக ஏராளமான வழக்குகள் தீர்வு காணப்படாமல் உள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்வு – பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை!!

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் 4, 25 உயர்நீதிமன்றங்களில் 419 என மொத்தமாக 423 நீதிபதி காலிப்பணியிடங்கள் உள்ளன. இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், விரைவாக நீதிபதிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நியமனம் செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்து உள்ளார். இதனால் நீதிபதிகள் நியமனம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!