தமிழக பள்ளி மாணவர்களின் வீடுதேடி வரும் சத்துணவு – உயர் நீதிமன்றம் ஆலோசனை!

0
தமிழக பள்ளி மாணவர்களின் வீடுதேடி வரும் சத்துணவு - உயர் நீதிமன்றம் ஆலோசனை!
தமிழக பள்ளி மாணவர்களின் வீடுதேடி வரும் சத்துணவு - உயர் நீதிமன்றம் ஆலோசனை!
தமிழக பள்ளி மாணவர்களின் வீடுதேடி வரும் சத்துணவு – உயர் நீதிமன்றம் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் வீடுகளுக்கு சென்று சத்துணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை கொடுத்துள்ளது.

சத்துணவு திட்டம்

கொரோனா அலை பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வந்த சத்துணவு திட்டத்தை நிறுத்தக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் சத்துணவு திட்டத்தில் பயனடைய தகுதியுடைய மாணவர்களின் வீடுகளுக்கு சென்று சத்துணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது. முன்னதாக சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை கடும் சரிவு – ரூ.4.90 ஆக நிர்ணயம்!

அதில், ‘கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளாக அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இன்று வரை திறக்கப்படவில்லை. அதனால் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சத்துணவுகளை வழங்க முடியவில்லை. எனினும் பள்ளி மாணவர்களுக்கு, சமைக்கப்படாத உணவுப் பொருட்களை 15 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு தினசரி சத்துணவு கிடைக்கும் வகையில் அம்மா உணவகங்கள், சமுதாய சமையற்கூடங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகளை வழங்குவதற்கான திட்டத்தை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ‘தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் உள்ள பஞ்சாயத்துகள், தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து மாணவர்களின் வீடுகளுக்கு சென்று சத்துணவு வழங்கும் வகையில் திட்டம் வகுக்கலாம்’ எனவும் இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை ஜூலை 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!