சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து அதிரடியாக விலகியுள்ள கதாநாயகி – என்ன காரணம் தெரியுமா?
தற்போது அடிக்கடி சீரியல் நடிகர், நடிகைகள் மாறி வருவது தொடர் கதை ஆகியுள்ளது. அதுவும் கதையின் கதாநாயகியே மாறுவது என்பதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில், சூப்பர் ஹிட் சீரியலின் நாயகி ஒருவர் தொடரை விட்டு விலகியுள்ளார்.
ஹீரோயின் விலகல்:
சின்னத்திரை சீரியல் நடிகர், நடிகைகள் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தியும் தங்களது திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காதா என்று போராடி வருகின்றனர். இதற்கு பரிசாக சின்னத்திரையை சேர்ந்த பலர் தற்போது வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கியுள்ளனர். சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளை மக்கள் அந்த கதாபாத்திரமாகவே பார்த்து வருகின்றனர்.
பாதாம் தெரியும்.. ஆதாம் தெரியாதா.. ஜிபியை பங்கமாய் கலாய்த்த கமல் – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ!
Exams Daily Mobile App Download
இதனால் சீரியலில் இருந்து எதிர்பாராத வகையில் நடிகர், நடிகைகள் மாற்றம் செய்யப்படும் போது அதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இந்நிலையில், சமீப காலமாக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் நாயகிகள் சீரியலில் இருந்து வெளியேறி வருகின்றனர். அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்ற பேரன்பு சீரியலில் தான் தற்போதைய மாற்றம் நடந்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
பேரன்பு சீரியலில் நாயகியின் தங்கை ஆர்த்தி என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அக்ஷிதா திடீரென்று சீரியலை விட்டு விலகியுள்ளார். இவர் தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதேபோல், விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியலிலும் இவர் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அக்ஷிதாவிற்கு சினிமா வாய்ப்பு கிடைத்திருப்பதால் தான் அவர் பேரன்பு சீரியலில் இருந்து விலகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்