சன் டிவி ரோஜா சீரியலை விட்டு விலகும் ஹீரோ சிபு – ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்களிலேயே ரசிகர்கள் மத்தியில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கும் ‘ரோஜா’ தொடரில் நாயகனாக நடித்து வரும் பிரபல நடிகர் சிபு சூர்யன், சீரியலை விட்டு விலகுவதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
சீரியல் நடிகர்:
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரான ‘ரோஜா’ பலரது கவனத்தை ஈர்த்த முக்கியமான தொடர்களில் ஒன்றாகும். இந்த தொடர் தான் தமிழ் சின்னத்திரை தொடர்களிலேயே அதிகளவு ரேட்டிங் பெற்று வரும் முதன்மையான சீரியலாகும். அதாவது ஒரு அனாதை பெண், பணக்காரர் ஒருவரை கான்ட்ராக்ட் மூலம் திருமணம் செய்துகொள்கிறார். இந்த திருமண பந்தத்தில் இணைந்த இருவருக்கும் நாளடைவில் காதல் உருவாகிறது. இதனிடையே நாயகியை அளிக்க நினைக்கும் குடும்பத்திடம் இருந்து அவரை பாதுகாக்கும் வகையில் ரோஜா சீரியல் நகர்ந்து வருகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இந்த ரோஜா சீரியலில் அர்ஜுன் என்ற கதாப்பாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிபு சூர்யனும், ரோஜா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை பிரியங்காவும் நடித்து வருகின்றனர். வெவ்வேறு மொழியை சேர்ந்த இந்த ஜோடிக்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தொடரில் அனு என்ற நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை, சமீபத்தில் ரோஜா சீரியலை விட்டு விளக்கினார். இந்நிலையில் இந்த தொடரில் நாயகனான நடித்து வந்த நடிகர் சிபு சூர்யனும் தொடரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – இன்று கடைசி நாள்!
இந்த தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட அவர், தனக்கு திருமணமாகி இருப்பதாக கூறி அவரது மனைவியின் புகைப்படத்தை சில நாட்களுக்கு முன்னாக பதிவிட்டிருந்தார். இதனையடுத்து தான் சினிமாவில் நடிக்க இருப்பதால் சீரியலை விட்டு விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். இந்த தகவல் ரோஜா சீரியல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் சிபு சூர்யன் திரைப்படங்களில் நடிக்க இருப்பதால் அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தற்போது தெரிவித்து வருகின்றனர். கன்னட நடிகரான சிபு சூர்யன் இதற்கு முன்னதாகவே சில சினிமா திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.