இருசக்கர வாகனங்களின் விலை 4வது முறையாக உயர்வு – டிச.1ம் தேதி முதல் அமல்!!

0
இருசக்கர வாகனங்களின் விலை 4வது முறையாக உயர்வு - டிச.1ம் தேதி முதல் அமல்!!
இருசக்கர வாகனங்களின் விலை 4வது முறையாக உயர்வு - டிச.1ம் தேதி முதல் அமல்!!
இருசக்கர வாகனங்களின் விலை 4வது முறையாக உயர்வு – டிச.1ம் தேதி முதல் அமல்!!

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மீண்டும் இருசக்கர வாகனங்களின் விலை உயர்வை அறிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

விலை உயர்வு:

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி செய்து வருகிறது. நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் உயர்வு ஏற்படுகிறது. அந்த வகையில் ஹீரோ நிறுவனம் வாகனங்களின் உற்பத்தி செலவு வீதத்தை அதிகரித்தது.

Follow our Instagram for more Latest Updates

இதனால் ஹீரோ நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ஸ்பிளென்டர், எக்ஸ்பல்ஸ், எக்ஸ்ட்ரீம், மேஸ்ட்ரோ உட்பட பல்வேறு வாகனங்களின் விலையை ரூ.1000 வரை உயர்த்தியது. இந்த நிலையில் மீண்டும் ஹீரோ பைக், ஸ்கூட்டர்கள் ஆகியவற்றின் விலையை உயர்த்த இருப்பதாக இந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஹீரோ பைக், ஸ்கூட்டர்கள் விலையானது 4-வது முறையாக உயர்கிறது.

டிச. 03 உலக மாற்றுத்திறனாளிகள் தினம் – தமிழகத்தில் சிறப்பு ஏற்பாடு! மாவட்ட ஆட்சியர் தலைமை!

Exams Daily Mobile App Download

அதன்படி இந்த முறை ஹீரோ பைக், ஸ்கூட்டர்களின் விலை ரூ.1500 வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஒவ்வொரு வாகனத்தின் மாடல் ரேஞ்ஜை பொறுத்து இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விலை உயர்வு வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!