மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படியுடன் சம்பள உயர்வு – முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு அறிவிக்கப்பட்ட 3% அகவிலைப்படி (DA) உயர்வின் மூலம் டெல்லியின் என்சிஆர் நகரங்களில் வசிக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் நிலுவைத் தொகையும் கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், சுமார் 50 லட்சம் மத்திய ஊழியர்கள் மற்றும் 70 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி தொகை 34% ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்திய பிறகு, அரசு ஊழியர்களின் சம்பளம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்படும். மத்திய அரசின் இந்த முடிவால், டெல்லி-என்சிஆரில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் உயர்வடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் DA உயர்வுடன் சேர்த்து, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், போக்குவரத்து அமைச்சகம், தொழிலாளர் அமைச்சகம், தகவல் தொடர்பு அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், உள்துறை அமைச்சகம் வேளாண் அமைச்சகம், சுகாதார அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, தேசிய தலைநகரான டெல்லியில் மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களும் இருப்பதால் இங்கு மட்டும் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இது தவிர, நொய்டா, கிரேட்டர் நொய்டா, குருகிராம் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் பல மத்திய அரசு அலுவலகங்கள் உள்ளன. அதனால் இங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அகவிலைப்படி அதிகரிப்பின் பலனைப் பெறுவார்கள். அந்த வகையில் நரேந்திர நரேந்திர மோடி அரசாங்கம், DA மற்றும் DR ஐ உயர்த்திய பிறகு, டெல்லி-NCR உட்பட நாடு முழுவதும் உள்ள 47 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களும், 68 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களும் தற்போது பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிதிப் பலன்களை பெறுவார்கள்.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் அரை நாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு!
இந்த அகவிலைப்படி உயர்வினால், அரசின் கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.9,544.50 கோடி சுமை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இந்த DA உயர்வு ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும். இப்போது ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ. 18,000 என்றால், அவர் ஏற்கனவே 31 சதவீத டிஏ விகிதத்தில் பெற்று வந்த ரூ.5,580 தொகை 34% DAவுக்கு பிறகு ரூ.6,120 ஆக உயரும். இதன் மூலம் 3 சதவீத DA அதிகரிப்பால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதம் ரூ.540 உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.