PM KISAN பயனாளிகளின் பட்டியலை சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!
PM கிசான் நிதியுதவி திட்டத்தின் 11வது தவணை பணத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள், அரசு வெளியிட்டுள்ள பயனாளிகளின் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள சில எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கிசான் திட்டம்
நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, கடந்த டிசம்பர் 1, 2018 அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 தவணைக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 11வது தவணைப் பணம் பெறவிருக்கும் தகுதியான விவசாயிகளின் பட்டியலை கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு விவசாயிகளும் ரூ.2000 உதவிப்பணமாக பெற உள்ளனர். இப்போது நீங்கள் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து, பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறவில்லை என்றால் உங்களது KYC எண் இன்னும் இணைக்கப்படவில்லை என்பதே அதற்கு அர்த்தம் என அரசு தெரிவித்துள்ளது. ஏனென்றால் கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை முடித்தவர்கள் மட்டுமே அரசின் நிதியுதவி பயன் திட்டங்களை பெற முடியும். தற்போது, KYC இணைப்புக்கான காலக்கெடுவை அரசாங்கம் மே 22 வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
பிஎம் கிசான் பயனாளிகளின் பட்டியலை சரிபார்க்க:
- முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தை திறக்கவும்.
- அதன் பிறகு main பக்கத்தை திறந்து விவசாயிகள் கார்னரை தேர்வு செய்யவும்.
- பின்னர் 2022 ஆம் ஆண்டுக்கான பயனாளிகளின் பட்டியலைக் கிளிக் செய்யவும்.
- பிறகு PM Kisan இணையதளத்தின் அடுத்த பக்கம் திறக்கும்.
- இப்போது உங்கள் கணக்கு எண், தொலைபேசி எண் அல்லது ஆதார் எண்ணை உள்ளிட்டு பயனாளிகளின் பட்டியலை சரிபார்க்கலாம்.
- இதனை எதிர்கால குறிப்பிற்காக பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.