தமிழகத்தில் நாளை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் – முழு விவரம் இதோ!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக பரவி வந்த கொரோனா நோய் தொற்று மக்களை மிகவும் கடுமையாக பாதித்தது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் தொற்று குறைய தொடங்கியது. மேலும் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் நோய் பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது.
இதனை தொடர்ந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்க தொடங்கியது. இந்த நிலையில் தடுப்பூசி போடுவது நாட்டில் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், தடுப்பூசி போட்டிருப்பவர்களை மட்டுமே வேலைகளில் அனுமதிக்க வேண்டும் என்று அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்தது. இருப்பினும் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராததால் அரசு தடுப்பூசி செலுத்துவதை அறிவுறுத்தி வருகிறது. இதை அடுத்து தமிழகத்தில் 12.9.2021 அன்று முதல் கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 34 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, பெருநகர சென்னை மாநகராட்சியில் 4-ந் தேதி (நாளை) 35-வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் டெங்கு காய்ச்சல் – சுகாதாரத்துறை நடவடிக்கை!
இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசியினை 2 தவணைகள் செலுத்திக்கொண்டு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் கடந்த நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு கார்பெவேக்ஸ் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வருகின்ற 30-ந் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியினை செலுத்தி கொள்ளுமாறு அரசு தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்