தமிழகத்தில் செப்.3 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!
தமிழகத்தில், வேலூர் மாவட்டத்தில் வருகிற 3ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி வாய்ந்த மற்றும் படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
இந்தியாவில் கொரோனா பரவல் காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு, பொது முடக்கம் போன்ற நடவடிக்கைகளால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் வெளிமாநிலங்கள், நாடுகளில் வேலை பார்த்த பலரின் நிலை கேள்விக்குறியானது. நாட்டில் மக்கள் வேலையின்மையால் மிகவும் வறுமையில் வாட தொடங்கினர். இதை அடுத்து சிறு, குறு நிறுவனங்கள் கொரோனா காலத்தில் செயல்பட தடை விதிக்கப்பட்டதால் அந்நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியது.
இதன் காரணமாக புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுப்பது குறைய தொடங்கியது. இதனால் மக்களை வேலைவாய்ப்பின்றி வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பிறகு அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றி அனைத்து கடைகள், வியாபார நிறுவனங்கள் போன்றவைகள் தொடங்க ஆரம்பித்தது. இதை தொடர்ந்து தனியார் தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கி புதிதாக வேலையாட்களை எடுக்க தொடங்கின. இதன் காரணமாக நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்க தொடங்கியது. மேலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 2023க்குள் 5G சேவை உறுதி – ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு!
அந்த வகையில் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் செப்.3 தேதி தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதாவது வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலமாக தனியார் நிறுவனத்துக்கு 12 ம் வகுப்பு கல்வித் தகுதி உடைய 18 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அதிகளவில் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முகாம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஈ.வெ.ரா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 3ம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்