தமிழக அரசு வழங்கும் ரூ.25,000 ரொக்கப் பரிசு – இல்லம் தேடி கல்வி திட்டம்! முழு விபரம் இதோ!
தமிழக பள்ளி மாணவர்களிடையே கற்றல் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில் சின்னம் (LOGO) உருவாக்குபவர்களுக்கு ரூ.25,000 பரிசுத்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
கல்வி திட்டம்
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரி செய்யும் விதத்தில் ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அளிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கல்வித்திட்டமானது கொரோனா பேரிடர் காலங்களில் 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் இழந்த கற்றல் திறனை சரி செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் சிறப்பு தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
அந்த வகையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பள்ளிகள் செயல்படாத நேரங்களில் தன்னார்வலர்களின் உதவியுடன் சிறிய குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் பள்ளியில் கற்றுக்கொண்ட கற்றல் திறன்களை இல்லம் தேடி கல்வி திட்டம் வாயிலாக மீண்டுமாக வலுப்படுத்தப்படும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதனுடன் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க விரும்பும் தன்னார்வலர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தவிர 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை எடுக்க இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இப்போது பள்ளிக்கல்வித்துறையின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க மக்களுக்கு எளிய வகையில் புரியும் அளவுக்கு சின்னம் ஒன்று உருவாக்க போட்டிகளை நடத்துவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த போட்டியில் அனைத்து நகர், ஊரகப் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெண்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்கலாம்.
அக்.25 வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு – கனமழையால் வெள்ளம் எதிரொலி!
இதில் சிறந்த படைப்புகளை உருவாக்கும் நபர்களுக்கு ரூ.25,000 ரொக்கப் பரிசாக அளிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் போட்டியாளர்கள் தங்களது படைப்புகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் வரும் அக்டோபர் 24ம் தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த சின்னத்தை பள்ளிக்கல்வி இயக்ககம் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கும் என அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.