மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பரிசாக ரூ.10,000 முன் பணம்? முழு விவரம் இதோ!
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகையை முன்னிட்டு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு பரிசு 31 மார்ச் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன் பணம்
மத்திய ஊழியர்களுக்கு வரவிருக்கும் ஹோலி பண்டிகையை தொடர்ந்து சிறப்பு விழா முன்பணத் திட்டத்தை வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறப்பு விழா முன்பண திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்பணமாக ரூ.10 ஆயிரம் ரூபாயை வட்டியின்றி பெற்றுக் கொள்ளலாம். அதாவது மத்திய அரசின் இந்த அட்வான்ஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
அந்த வகையில் ஹோலி பண்டிகையின் போது ஊழியர்கள் முன்பணமாக ரூ.10,000 எடுத்துக் கொள்ளலாம். இந்த பணத்திற்கு அவர்கள் எந்த வட்டியும் செலுத்த வேண்டியதில்லை. கடந்த ஆண்டும் கூட மத்திய அரசு ஊழியர்களுக்கு இது போன்ற சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது. இப்போது திருவிழாவிற்காக வழங்கப்படும் இந்த முன்பணம் முன்கூட்டியே ஊழியர்களின் வங்கி கணக்குகளில் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணத்தை பணியாளர்கள் பண்டிகைக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும்.
இன்று முதல் பிப்.25 வரை மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
இதனுடன், இந்த பணத்தை திரும்பப் பெறுவதும் 10 தவணைகளில் செய்யப்படும். அதாவது, மத்திய அரசு ஊழியர்கள் ரூ.10 ஆயிரம் தொகையை மாதாந்திர தவணையாக ஆயிரம் ரூபாய் என்றளவில் எடுக்கலாம். இந்த சிறப்பு முன்பணம் ஒருவேளை அறிவிக்கப்பட்டால், அரசுக்கு சுமார் ரூ.8,000 முதல் ரூ.10,000 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த முன்பணத்தை ஊழியர்கள் டிஜிட்டல் முறையில் மட்டுமே செலவிட முடியும். இப்போது மாநில அரசுகளும் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது கவனிக்கத்தக்கது.