Post Office ல் லாபம் தரும் சேமிப்பு திட்டம் – குறைந்த முதலீடு! முழு விவரம் இதோ!’
அஞ்சலகத்தில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் வருமான வரி வரி விலக்கு மற்றும் அதிக வட்டி விகிதம் அளிக்க கூடிய திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டங்கள்:
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் வங்கியை விட சிறந்த லாபத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் கொடுக்கிறது. சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி தொகை கிடைப்பதால் முதிர்வு காலத்தில் சேமிப்புடன் சேர்த்து கூடுதல் வட்டித் தொகையும் கிடைக்கிறது. அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.மேலும் இத்திட்டங்கள் வருமான வரி விலக்கு போன்ற சலுகைகளும் உண்டு.
TN Job “FB Group” Join Now
இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது. முதலீடு செய்யும் பணம் அப்படியே இருக்கும், வட்டி வாயிலாக வருமானமும் கூடுதலாக கிடைக்கும். அந்த வகையில் அதிக வருமாம் பெற நினைப்பவர்களுக்கு ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் மாதத்துக்கு ரூ.10,000 வரையில் சேமித்து குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம். ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் நீங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டித்து கொள்ளலாம்.
ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் (RD) நீங்கள் தினசரி 100 ரூபாய் கூட சேமிக்கலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. இதில் தற்போது ஆண்டுக்கு 5.8 சதவீதம் வட்டி கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக நீங்கள் 333 ரூபாய் முதலீடு செய்தாலே 16 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கலாம். முதிர்வு காலத்தில் உங்களுக்கு ரூ.16.28 லட்சம் கிடைக்கும். 10 ஆண்டுகளில் நீங்கள் எதிர்பார்த்த தொகையை பெறலாம். இத்திட்டத்தின் கீழ் நீங்கள் தனி கணக்காகவோ அல்லது இணைப்பு கணக்காகவோ தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை பெயரிலும் இத்திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும்.