Post Officeல் சூப்பரான சேமிப்பு திட்டங்கள் அறிமுகம் – முழு விவரம் இதோ!
அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிக வட்டி வீதம் அளிக்கபடுக்கப்படுகிறது. அத்துடன் வருமான வரி விலக்கு மற்றும் SSY ஆனது EEE போன்ற நன்மைகளும் உண்டு.
சேமிப்பு திட்டங்கள்:
இந்தியா அஞ்சல் துறை அண்மையில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தியது. இதனால் கணக்குதாரர்களுக்கு சேமிப்புடன் சேர்த்து அதிக முதலீட்டு தொகை கிடைக்கிறது. அதனால் பலரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காண்பிக்கின்றனர். முதலில் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கும் முன் அதன் முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது அவசியம். தற்போது பிரபலமான சேமிப்பு திட்டங்கள் குறித்து இப்பொழுது காண்போம். ஆனால் அது உண்மையில்லை சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வருமான வரி சட்டத்தின் 80C இன் முதலீட்டு தொகையில் விலக்கு அளிக்கபடுகிறது. மேலும் இதில் ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அத்துடன் SSY ஆனது EEE அம்சங்களும் வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் நியமிக்கப்பட்ட தபால் அலுவலக கிளைக்கு செல்லலாம். இதில் அடுக்கு-1 கணக்குகளில் தன்னார்வ முதலீடுகளுக்காக முதலீட்டாளர்கள் நிதியாண்டில் ரூ.50,000 வரை விலக்கு கோரலாம்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!
இத்திட்டத்தில் ரிட்டயர்மென்ட் கார்பஸில் இருந்து வரும் வருமானம் மற்றும் மொத்த தொகை மாற்றங்களுக்கு வரி சலுகை கிடையாது. அந்த வரிசையில் அஞ்சல் அலுவலக சேமிப்புக்கணக்கில் ரூ. 3,500 மற்றும் கூட்டுக் கணக்குகளில் ரூ. 7,000 வரை ஈட்டப்படும். மேலும் வரிவிலக்கு அளிக்கப்படும். அதனை தொடர்ந்து மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ரூ. 1.5 லட்சம் வரையிலான டெபாசிட் களுக்கு 80C வரை வரி சலுகை உண்டு. அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் பெறப்படும் வட்டிகள் TDSக்கு உட்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்