மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!
கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கான 31% அகவிலைப்படி (DA) தொகையுடன் இன்னும் 3% கூடுதல் நிவாரணத்தை பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, அகவிலைப்படி (DA) தொகை 3 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி (DA) உயர்வுகளுக்கு மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் 30ம் தேதியன்று ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான அறிவிப்பில், ‘மத்திய அமைச்சரவை, விலைவாசி உயர்வை ஈடுகட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA மற்றும் DR தொகையை ஜனவரி 1, 2022 முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தற்போதுள்ள அடிப்படை விகிதமான 31 சதவீதத்தை விட 3 சதவீதம் அதிகமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளது. இப்போது DA கூடுதல் தவணை ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரில், மத்திய அமைச்சரவை 2 தவணைக்கான அகவிலைப்படி தொகையை 3 சதவீதம் முதல் 31 சதவீதம் வரை உயர்த்தியது. இது ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வந்தது.
அதற்கு முன், ஜூலையில் அரசாங்கம் அகவிலைப்படி மற்றும் கொடுப்பனவு விகிதத்தை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தியது. இப்போது 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஃபார்முலாவின்படி DA தொகை 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மூலம் கருவூலத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பு ஆண்டுக்கு ரூ.9,544.50 கோடியாக இருக்கும் என்றும் இதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.