தமிழகத்தில் நாளை (செப்.03) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு விவரம் இதோ!
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.3) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அம்மாவட்டத்தில் மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்களை மாற்றுதல், வயர்களை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனை தொடர்ந்து பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகளும் நடைபெறுகிறது. இந்த பணிகள் முடியும்வரை மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்கள் பாதுகாப்பிற்காகவும் பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நாளை (செப்.03) தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அத்துடன் மின்மாற்றிகளில் உள்ள பழுது பணிகள் மற்றும் செடி கொடிகள் அகற்றும் பணிகளும் நடைபெற உள்ளது. அதனால் திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூர், கீழ திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான விடுப்பு குறித்த முக்கிய தகவல் – CEO அதிரடி அறிவிப்பு!
அதனை தொடர்ந்து நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன் பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம்,, பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களுர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புது அக்ரஹாரம், நடுக்கடை ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும் காலை 9 மணி மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்