தமிழகத்தில் நாளை (ஆக.23) மின்தடைக்கான பகுதிகள் – முழு விவரம் இதோ!
விருதுநகர் மாவட்டம் உள் அரங்கு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தற்போதைய சூழ்நிலையில் மின்சாரம் இல்லாமல் மக்களால் வாழ முடியாது என்ற நிலை நிலவி வருகிறது. இதற்கு காரணம் மின்சாரம் என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவையாக உள்ளது. அதாவது வீடு முதல் வேலை நடைபெறும் அனைத்து இடங்களிலும் மின் தேவை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் அதிகமான மின்சாரம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பல புதிய திட்டங்களில் மின் உற்பத்தியை பெருக்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பல தரப்பு மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. இதற்கு, தமிழக அரசு மின் உற்பத்தி குறைவால் தான் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் துணை மின் நிலையங்களில் இருந்து வரும் மின்சாரத்தை மக்களுக்கு சீராக அளிக்கும் பட்சத்தில் மாதந்தோறும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் விருதுநகர் மாவட்டம் உள் அரங்கு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
UPI மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டண வசூல்? நிதி அமைச்சகம் விளக்கம்!
இதன் காரணமாக துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் ரோடு, கஸ்தூரிபாய் ரோடு, ரோசல்பட்டி, கம்மாப்பட்டி, சத்தியமூர்த்தி சாலை, பாண்டியன் நகர், பட்டேல் ரோடு, பேராலி ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி, தந்தி மர தெரு, எல். ஐ. சி காலனி, கல்லூரி சாலை, ரயில்வே பீடர் ரோடு, மெயின் பஜாரில் வடக்கு பகுதி, காந்திபுரம் ரோடு, மணி நகரம், காசுக்கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்