ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரம் இதோ!
தெற்கு ரயில்வே நிர்வாகம் வளத்துார் – கேதாண்டபட்டி இடையே ரயில் பாதைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அந்த வழியில் செல்லு ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்பு
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவையில் பேருந்து கட்டணங்களை விட குறைவாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் இந்த ரயில் சேவையை தேர்ந்தெடுக்கின்றனர். இதனை தொடர்ந்து ரயில்வே நிர்வாகமும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. அதாவது, மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விரைவான போக்குவரத்தை விரும்பும் மக்களுக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கிறது.
இதை தவிர, முன்பதிவு வசதிகள், இருக்கை வசதிகள் போன்ற சேவைகளை மக்கள் வசதிக்கேற்ப ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது பாதியளவு ரயில் சேவைகளை மின் ரயில் சேவையாக மாற்றி வருகிறது. இதன் காரணமாக அனைத்து பயணிகள் ரயில்களும் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயர்கல்வி பெற கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
இந்த நிலையில் வளத்துார் – கேதாண்டபட்டி இடையே ரயில் பாதைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த தடத்தில் செல்லும் ரயில் சேவைகளின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, சென்டிரல்-கர்நாடகா மாநிலம் மங்களூர் விரைவு ரயில் வரும் 6,10,12,13, 19,20ம் தேதிகளில் சென்ட்ரலில் இருந்து 40 நிமிடங்கள் தாமதமாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்டிரல்-கர்நாடகா மாநிலம் மைசூர் செல்லும் விரைவு ரயில் வரும் 6,10,12,13, 19,20ம் தேதிகளில் சென்ட்ரலில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாக செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்