TCS நிறுவனத்தில் 15 நாட்களுக்கு இலவச டிஜிட்டல் பயிற்சி படிப்பு – முழு விவரம் இதோ!

0
TCS நிறுவனத்தில் 15 நாட்களுக்கு இலவச டிஜிட்டல் பயிற்சி படிப்பு - முழு விவரம் இதோ!
TCS நிறுவனத்தில் 15 நாட்களுக்கு இலவச டிஜிட்டல் பயிற்சி படிப்பு - முழு விவரம் இதோ!
TCS நிறுவனத்தில் 15 நாட்களுக்கு இலவச டிஜிட்டல் பயிற்சி படிப்பு – முழு விவரம் இதோ!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப (IT) நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ‘கேரியர் எட்ஜ்’ என்ற இலவச 15 நாள் சுய டிஜிட்டல் படிப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

டிஜிட்டல் படிப்பு

இந்தியாவின் சிறந்த தொழில்நுட்ப வழங்குனரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் புதிய வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தேவையான சில இலவச பயிற்சி வகுப்புகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ‘கேரியர் எட்ஜ்’ என்ற இலவச 15 நாள் சுய டிஜிட்டல் படிப்பை வழங்குவதாக அறிவித்துள்ள இந்நிறுவனம் தினசரி 1 முதல் 2 மணிநேரம் என்ற அளவில் 15 நாட்களுக்கு இந்த வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளிகள் – மாநில அரசு தகவல்!!

தொடர்ந்து இந்தப் பாடநெறியானது, பயனர்கள் டிஜிட்டல் உலகத்திற்கான புதுமையான கற்பித்தல் உத்திகளை தெரிந்துகொள்ள உதவும் என்றும் தொலைதூரத்தில் மதிப்பீடுகளை நடத்துவதற்கான அத்தியாவசிய நுட்பங்களை உள்ளடக்கியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் என்பதால், பயனர்கள் பாடத்திட்டத்தை எங்கிருந்தும், எந்த நேரத்திலும், எந்த சாதனத்திலிருந்தும் அணுகலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், பாடத்திட்டத்தின் ஒவ்வொரு தொகுதியின் முடிவிலும் உள்ள புரிதலை சரிபார்க்க, ரீகேப் வினாடி வினாக்கள் பகுதியை இவை கொண்டுள்ளது. கூடுதலாக, சான்றிதழுக்காக முடிக்கப்பட வேண்டிய பாடநெறி அதன் இறுதி மதிப்பீட்டை பொறுத்து அமையும். இந்த அனைத்து மதிப்பீடுகளும் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. TCS நிறுவனத்தின் இந்த ‘கரியர் எட்ஜ்’ திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையுடன் ஒத்துப்போகிறது குறிப்பிடத்தக்கது.

‘பாரதி கண்ணம்மா’ ஹேமா மற்றும் கண்ணம்மாவின் பாச பிணைப்பு – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

அதாவது இத்திட்டம் ஆசிரியர்களின் மேம்பாட்டை வலியுறுத்துவதோடு, பாரம்பரிய கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளுடன் கூடிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதை வலியுறுத்துகிறது என்று TCS இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இப்பயிற்சிக்கான அனைத்து மதிப்பீடுகளும் ஆன்லைனில் முடிக்கப்பட வேண்டும் என்பதால் விண்ணப்பதாரர்கள் தேர்வுகளுக்காக குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.

இதனுடன் விண்ணப்பதாரர்கள் 14 தொகுதிகள் இலவச பயிற்சி மற்றும் இறுதி மதிப்பீட்டை முடித்ததும் சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் சான்றிதழை பெறுவார்கள். இப்போது, குறிப்பிட்ட 15 நாட்களுக்குள் பயிற்சி வகுப்புகளை முடிக்க முடியாத விண்ணப்பதாரர்கள் இந்த வகுப்புகளை முடித்த பிறகு அனைத்து மாட்யூல்களும் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!