TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தேர்வு தேதி குறித்த விவரம் இதோ!
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகி உள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம், டெட் தேர்வு குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இதனால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.
தேர்வு தேதி எப்போது:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, பட்டப் படிப்புடன் பி.எட்., டி.எல்.எட்., உள்ளிட்ட படிப்பு முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பட்டதாரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணியாற்ற முடியும்.
TN Job “FB Group” Join Now
மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை டெட் தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கான அறிக்கை 07.03.2022 அன்று வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 26.04.2022 வரை பெறப்பட்டன. அந்த வகையில் இத்தேர்வுக்கு 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. இந்த தேர்வு 2 தாள்களாக நடைபெறும். முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும் நடைபெறும்.
மேலும் கடந்த 2019 ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இதையடுத்து விண்ணப்ப பதிவு முடிந்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தேர்வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக விண்ணப்பதார்கள் காத்து கொண்டு உள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக TRB தேதி குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. மேலும் தேர்வை விரைந்து நடத்தினால் மட்டுமே, விண்ணப்பித்து காத்திருக்கும் பட்டதாரிகள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வி ஆண்டிலேயே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர முடியும் என தெரிவித்து உள்ளனர்.