Post Office இல் மாதந்தோறும் வருமானம் வரும் பென்சன் திட்டம் – முழு விபரங்கள் இதோ!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் மாதாந்திர வருமான திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம், முதிர்வு தொகை உள்ளிட்ட பலன்களை பற்றி விரிவாக பார்ப்போம். மேலும் இத்திட்டத்தில் இணைவதற்கான தகுதிகளை பற்றியும் காண்போம்.
பென்ஷன் திட்டம்
இந்திய அஞ்சல் அலுவலகத்தில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களில் தற்போது ஏராளமானோர் இணைந்துள்ளனர். ஏனெனில் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் வங்கிகளை காட்டிலும் இரட்டிப்பு லாபங்கள் கிடைக்கிறது. மேலும் இத்திட்டத்தில் இணைய குறைந்தபட்சமாக ரூ.100 செலுத்தினாலே போதும் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட இந்த சேமிப்பு திட்டங்களில் இணைகிறார்கள். அத்துடன் அஞ்சல் அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுவதால் பணத்திற்கு முழு பாதுகாப்பும் கிடைக்கிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மாதாந்திர வருமான திட்டத்தை பற்றி விரிவாக பார்ப்போம். இந்த திட்டத்தில் மாதந்தோறும் வருமானத்தை பெற முடிகிறது. இத்திட்டத்தில் இணைய ரூ.1000 முதல் செலுத்தி கணக்கை தொடங்கலாம். அத்துடன் இதில் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கூட இத்திட்டத்தில் கணக்கை தொடங்க முடியும். ஆனால் அவர்களின் பெற்றோர் பெயரில் கணக்கை தொடங்க வேண்டும். மாதாந்திர வருமான திட்டத்தில் ஆண்டுக்கு 6.6% வட்டி விகிதம் வரை வழங்கப்படுகிறது. இதில் தனி நபரும் கணக்கு தொடங்கலாம் அல்லது கூட்டு கணக்காகவும் தொடங்கலாம்.
TCS நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அத்துடன் இணைப்பு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும். மாதாந்திர வருமான திட்டம் 5 ஆண்டுகள் முதிர்வு காலத்தை கொண்டது. இந்த திட்டத்தில் ரூ.2 லட்ச முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.1,100 வட்டி கிடைக்கிறது. அதன்படி முதிர்வு காலத்தின் முடிவில் வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு வட்டி மட்டும் ரூ.66,000 வரை கிடைக்கிறது. மேலும் 5 ஆண்டுகால முடிவில் 2,66,000 லட்ச ரூபாய் வரை சேமிக்க முடிகிறது. இது ஓய்வு காலத்தில் முதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.