அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதாருடன் இணைப்பு! முழு விபரங்கள் இதோ!
ரேஷன் கார்டை வைத்து பல மோசடிகள் நடைபெறுவதால் தங்களுடைய ஆதார் கார்டை ஜூன் 30ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ரேஷன் கார்டு
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கார்டுகள் குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் தமிழக அரசின் பல திட்டங்களுக்கும் ஆவணமாக உள்ளது. இந்த ரேஷன் கார்டுகளுமே தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த ரேஷன் கார்டு விஷயத்தில் அரசு சசார்பில் பல புதிய வழிமுறைகளும், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து, நாட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு “ஒரே நாடு ஒரே ரேஷன்” என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு பயன் பெறும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ரேஷன் கார்டை வைத்து எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையில் வேண்டுமானாலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
தமிழகத்தில் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பு – முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கை!
இதற்கிடையில் ரேஷன் கார்டை வைத்து பல மோசடிகள் நடைபெறுவதாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அதனை தடுக்கும் நோக்கில் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து கார்டுதாரர்களும் தங்களது ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், நீங்கள் வீட்டில் இருந்த படியே உங்களுடைய ரேஷன் கார்டில் ஆதார் கார்டை இணைக்க பல வசதிகளை அரசு ஏற்படுத்தி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.