Post Office இல் ஆண் குழந்தைக்களுக்காக சூப்பரான சேமிப்பு திட்டம் – முழு விபரங்கள் இதோ!
அஞ்சல் அலுவலகத்தில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் கணக்கு மற்றும் போன் மகன் சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம், முதிர்வு காலம் உள்ளிட்டவற்றை விரிவாக பார்க்கலாம்.
சேமிப்பு திட்டம்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தொழில்களில் ஏற்பட்ட இழப்பு காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் சேமிக்க முடிவு செய்தனர். அதில் குறிப்பாக அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிகளவு முதலீடுகளை செலுத்த தொடங்கியுள்ளனர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் அதிகமான வட்டி தொகையை அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் பெற முடிகிறது. அதனால் சேமிப்பு திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் ஆண் குழந்தைக்களுக்காக சேமிக்க பொன்மகன் சேமிப்பு திட்டம் அதிக பலன்களை தருகிறது. இத்திட்டத்தில் இணைவதன் மூலமாக தங்கள் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதில் இருந்து படிப்பு முடிகின்ற வரையிலும் செலவுகளை சுலபமாக எதிர்கொள்ள முடியும். அத்துடன் இத்திட்டத்தில் முதிர்வு காலத்திற்கு முன்பாக வைப்பு தொகையை பெற்றுக் கொள்ளும் வசதிகளும் உள்ளது. இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 முதல் 1 லட்ச ரூபாய் வரை சேமிப்பு தொகையை செலுத்தி கொள்ளலாம். மேலும் இதில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு 15 ஆண்டுகளுக்கு சேமிப்பு தொகையை செலுத்த வேண்டும்.
இதற்கான வட்டி விகிதம் 8.1 சதவீதம் ஒரு ஆண்டுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் இணைவதற்கான வயது வரம்பு ஏதும் கிடையாது. இதையடுத்து பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் கணக்கு என்பதில் கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம். இத்திட்டத்தில் செலுத்தப்படும் முதலீடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை ஐசிஐசிஐ அல்லது எஸ்பிஐ போன்ற வங்கிகளிலும் தொடங்கலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். அஞ்சல் அலுவலகத்தில் இத்திட்டத்திற்கு 7.9 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஆனால் வங்கிகளில் இத்திட்டத்திற்கு 7% வட்டி விகிதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.