தமிழகத்தில் சிறப்பு முகாம் மூலம் 5,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் மூலம் சுமார் 5,000க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட இருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
வேலை வாய்ப்பு
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று ஓய்ந்திருக்கும் நிலையில், அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு சிறப்பு முகாம் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை அளிக்க திட்டமிட்டுள்ள அரசு இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கோவை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டிச.13 முதல் 1 முதல் 7 ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் – மாநில அரசு அறிவிப்பு!
அந்த வகையில் வேலை வாய்ப்புகள் இல்லாத இளைஞர்களுக்கு வரும் டிச.18ம் தேதியன்று கோவை மாவட்டம் ஈச்சனாரி, ரத்தினம் கல்லூரியில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 150 முன்னணி தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த சிறப்பு முகாமில் உற்பத்தி, ஜவுளி, பொறியியல், தொழில்நுட்ப துறை, கட்டுமானம், ஆட்டோ மொபைல்ஸ், விற்பனை மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்களில் ஆட்சேர்ப்பு செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் 5,000க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்புகள் இருப்பது கவனிக்கப்படத்தக்கது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? ஓமைக்ரான் அச்சம்!
இப்போது இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது சுயவிவரம், கல்வி சான்று ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்றும் இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்து. அதே போல முகாமில் கலந்து கொள்வதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் இது குறித்த கூடுதல் விவரங்களை 9499055938 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.