அஞ்சலகத்தில் வெறும் 5 வருடங்களில் 7 லட்சம் வரை சேமிப்பு – முழு விவரங்கள் இதோ!!
இந்தியாவில் முதியவர்கள், பெண் குழந்தைகள், ஓய்வூதியதாரர்கள், சாமானிய மக்கள் மற்றும் ஆண்குழந்தைகள் என அனைவருக்கும் மத்திய அரசு அஞ்சல் துறை மூலம் பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
அஞ்சல் சேமிப்பு:
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்களில் தங்களது சேமிப்பு மற்றும் முதலீடுகளை செலுத்தி வருகிறது. அதில் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படும் அமைப்புகளில் ஒன்றாக அஞ்சல் துறை இருந்து வருகிறது. அதனால் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் மற்றும் டெபாசிட் செய்பவர்களுக்கு முதல் தேர்வாக அஞ்சல் துறை விளங்கி வருகிறது. இவ்வாறு அஞ்சல் துறையில் பெரும்பாலான மக்களின் பங்கு உள்ளதால் மத்திய அரசு அனைத்து விதமான மக்களுக்கும் ஏற்ற வகையில் பல்வேறு திட்டங்களை அஞ்சல் துறையில் செயல்படுத்தி வருகிறது.
அவ்வாறு செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் மூத்த குடிமக்களுக்கான திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் ஓய்வு பெற்ற 50 வயதிற்கு மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட அனைவரும் இந்த கணக்கை தொடங்கலாம். இந்த மூத்த குடிமக்கள் திட்டம் ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களின் எதிர்கால நலன் கருதி மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் திட்டத்தில் ரூ.1000 முதல் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அவ்வாறு 5 ஆண்டுகள் முடிவடையும் போது ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ் பெற முடியும்.
“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அடுத்த போட்டியாளர் – ப்ரோமோ ரிலீஸ்!
இந்த திட்டத்திற்கான காலத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு நீட்டிக்க விரும்பினால் 3 ஆண்டுகள் வரை நீட்டித்து கொள்ளலாம். இதுவரை மூத்த குடிமக்கள் திட்டத்திற்கு 7.4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மாதம் ரூ.8,334 முதலீடு செய்வதன் மூலம் 5 வருடங்கள் முடிவில் வட்டியுடன் சேர்த்து ரூ.7 லட்சம் ரிட்டன்ஸ் பெற முடியும். வங்கி டெபாசிட் தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை விட மூத்த குடிமக்கள் திட்டத்தில் கிடைக்கும் வட்டி விகிதம் அதிகம் என்பதால் இந்த திட்டம் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வுதாரர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.