தமிழக பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? விவரங்கள் இதோ!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஜூன் 20) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். மேலும் துணை தேர்வு குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு கடந்த 5ம் தேதி 12ம் வகுப்புக்கும், 6ம் தேதி 10ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு தொடங்கியது. அதே போல 1 – 9ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடைபெற்று முடிவடைந்தது. அதனை தொடர்ந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டு 1 -10 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் மதிப்பீடு பணிகள் நடைபெற்று வந்தது.
TN Job “FB Group” Join Now
கடந்த 17ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிந்த நிலையில் திடீரென தேதி ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 20ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் படி இன்று 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. www.tnresults.nic.in, www.dge1tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்கள் வாயிலாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். 2021 – 2022ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வில் 12ம் வகுப்பில் மொத்தம் 7.55 (93%) லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
10ம் வகுப்பில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,52,499 மாணவிகளும் 4,60,120 மாணவர்கள் ஆவார்கள். 10ம் வகுப்பு தேர்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் ஜூன் 24ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து 12ம் வகுப்புக்கு ஜூலை 25ம் தேதி துணைத்தேர்வு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.