‘ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்திருக்க வேண்டும்’ – நெருங்கிய நண்பன் திடீர் வாக்குமூலம்!

0
'ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்திருக்க வேண்டும்' - நெருங்கிய நண்பன் திடீர் வாக்குமூலம்!
'ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்திருக்க வேண்டும்' - நெருங்கிய நண்பன் திடீர் வாக்குமூலம்!
‘ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்திருக்க வேண்டும்’ – நெருங்கிய நண்பன் திடீர் வாக்குமூலம்!

யாருமே எதிர்பாராத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சித்ராவின் மரணம் குறித்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்திருக்க வேண்டும் என ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பர் திடீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சித்ராவின் மரணம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக அறிமுகமானவர் தான் சித்ரா. இவருக்கும் இவரது காதலரனுமான ஹேம்நாத்தும் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். பின்பு, ஒரு நாள் எதிர்பாராத விதமாக சித்ரா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் என அறிவிக்கப்பட்டபோது திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியது. ஹேம்நாத் சித்ராவை அடிப்பதும் அவ்வப்போது சந்தேகப்பட்டதன் காரணமாக தான் சித்ரா தற்கொலை செய்திருக்க வேண்டும் என கூறப்பட்டது. இதனால் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகிய பிக்பாஸ் நடிகை கேபி வாங்கிய புது கார் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

பின்பு, ஹேம்நாத் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சித்ரா உண்மையாகவே எதனால் தற்கொலை செய்துகொண்டார் என்பது மர்மமாகவே இருந்தது. சித்ரா இறந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையாகவே சித்ராவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது கடவுளுக்கும் சித்ராவுக்கு மட்டுமே தெரியும் என பலரும் அமைதியாகி விட்டனர். இந்நிலையில், சித்ராவை கண்டிப்பாக ஹேம்நாத் தான் கொலை செய்திருக்க வேண்டும் என ஹேம்நாத்தின் நண்பர் தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

அதாவது ஹேம்நாத் இதுவரை பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்து அதில் குடி கூத்து என சந்தோசமாக இருந்து வந்தார். ஹேம்நாத்தை பற்றி தெரியாமல் சித்ரா எப்படி இவரை காதலித்தார் என்பது புதிராகவே இருக்கிறது. கண்டிப்பாக ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்திருக்க வேண்டும். சித்ரா அனைவரிடமும் நன்றாக பழகும் குணம் கொண்டவர். இவருக்கு இப்படிப்பட்ட நிலைமையா என்பது வியப்பாக இருக்கிறது என ஹேம்நாத்தின் நண்பர் கூறியுள்ளார். தற்போது ஹேம்நாத் தான் கொலை செய்திருப்பாரோ என சந்தேகம் எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!