சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஹெலிகாப்டர் சேவைக்கு அனுமதி!
கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதை தொடர்ந்து அனைத்து கோவில்களுக்கும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு வசதிமிக்க பக்தர்கள் வருவதற்கு வசதியாக தற்போது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
சபரி மலை ஐயப்பன் கோவில்
நாடு முழுவதும் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு ஊரடங்கு விதிமுறைகள் அரசு அறிவித்தது. அதில் குறிப்பாக அனைத்து கோவில்களுக்கும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. அத்துடன் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்து உள்ளது. மேலும் வசதிமிக்க பக்தர்கள் வருகை புரிவதற்கு ஹெலிகாப்டரில் வர வசதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – முக்கிய கோரிக்கை!
ஏற்கனவே சபரி மலைக்கு அருகே உள்ள நிலக்கல் பகுதியில் ஒரு விமான தளம் திருவாங்கூர் தேவசம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் சேவை வழங்கும் திட்டத்தை கொச்சியிலிருந்து நிலக்கல்லுக்கு தொடங்கியது. இதற்கு தகுந்த வரவேற்பை கிடைக்காததால் இத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது இந்த விமான நிலையம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளும் விதமாகவும் மற்றும் வசதிமிக்க பக்தர்களின் பயணத்தை எளிதாக்கவும் ஹெலிகாப்டர் சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.
அடுத்த 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – 30 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி!
இதற்காக ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு திருவாங்கூர் தேவசம் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி 3 ஆண்டுகளுக்கு அதிக தொகைக்கு ஏலம் கேட்கும் விமான நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட தேவசம் போர்டு அறிவிப்பை வெளிட்டுள்ளது. இங்கு ஒரு முறை விமான தரையிறங்குவதற்கு வாரியம் ரூ.20000 கட்டணமாக வசூலித்து வருகிறது. இவ்வாறு விமான சேவையை வழங்குவதன் மூலமாக விஐபிக்கள் மற்றும் வசதிமிக்க பக்தர்கள் கோவிலுக்கு அதிக அளவில் வருகை புரிவார்கள். இதனால் கோவிலின் வருமானமும் அதிகரிக்கும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.