ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு – குன்னூரில் நடந்தது என்ன? தீவிர விசாரணை!
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்த விமானப்படை ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது. இதில் உள்ள அனைவரும் இறந்து விட்டன. இது தொடர்பான விவரங்களை கண்டறிய கருப்புப்பெட்டி தேடும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கருப்புப்பெட்டி கண்டெடுப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு இந்தியாவின் முதலாவது முப்படைகளின் தலைமைத் தளபதியான பிபின் ராவத் மற்றும் அவர் மனைவி மற்றும் விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் டெல்லி இருந்து புறப்பட்டது. இதனை தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக நேற்று முற்பகல் 11.30 மணிக்கு இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்த பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையில் விபத்து எப்படி நிகழ்ந்தது என்று கண்டறிய கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
டிச.10 முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அமைச்சரவையில் இன்று முக்கிய முடிவு!
இந்த கருப்பு பெட்டியில் இரண்டு பகுதிகள் இருக்கிறது. அதில் ஒன்று பைலட்டுகள் பேசியதை பதிவு செய்யும் மற்றொன்று விமானம் எவ்வளவு வேகத்தில் மற்றும் எவ்வளவு தூரத்தில் பறந்தது போன்ற தரவுகள் சேமித்து வைத்திருக்கும் பகுதி உள்ளது. இந்த இரண்டு பகுதிகளில் கடைசியாக 2 மணி நேரத்திற்கு பைலட்டுகளுக்கும் தரைக்கட்டுப்பாடு மையத்திற்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களை சேமித்து வைத்திருக்கும். இதனால் கருப்பு பெட்டியை பயன்படுத்தி இந்த விபத்தில் ஏற்பட்டது என்ன? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். அத்துடன் இந்த கருப்பு பெட்டியை தீயில் எரித்தாலும் இதில் உள்ள தரவுகள் அழியாது.
FD கணக்குகளுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள் – முக்கிய விவரங்கள் இதோ!
மேலும் இது புவி ஈர்ப்பு விசையை விட 3400 மடங்கு விசையும் அத்துடன் 1000 டிகிரி செல்சியஸை விட அதிக வெப்பநிலையையும் தாங்கக் கூடியது. இந்த பெட்டியின் நிறம் ஆரஞ்சு நிறமாகும். தற்போது இந்த கருப்பு பெட்டியை குன்னூர் அருகே காட்டேரி நச்சுப்புராசத்திரம் மலைப்பகுதியில் கண்டுபிடித்துள்ளன. இந்த பெட்டியை பெங்களூர் அல்லது டெல்லிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அதன் பின் தகவல் சேகரிக்கப்படும். இதன் மூலம் கடைசியாக கடைசி நேரத்தில் என்ன நிகழ்ந்தது என்பதையும், விமானிகள் பேசியது என்ன என்பதையும், இந்த ஹெலிகாப்டர் என்ன காரணத்திற்காக விபத்துக்குள்ளது என்பதையும் அறிய முடியும். எனவே இந்த விபத்து குறித்து முழு விபரங்களை பெற இது முக்கியமான கருவியாகும்.