தமிழகத்தில் 3 நாட்களுக்கு தொடரும் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை இன்னும் 3 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கனமழை:
தமிழகத்தில் கோடை வெயில் கடந்த மார்ச் மாத தொடக்கத்திலேயே சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது, இதனால் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு கோடை வெயில் அதிகமாகவே இருந்தது. இந்த வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் பொதுமக்கள் வாடி வதங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் இதனால் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த சில வாரங்களாக மாநிலத்தில் பல மாவட்டங்களில் லேசானது முதல் கனமான மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது.
Exams Daily Mobile App Download
குறிப்பாக, பொதுமக்களும் இதனால் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
சமையல் சிலிண்டர் மானியம் பெறுவதற்கான புதிய விதிமுறை வெளியீடு – முக்கிய அறிவிப்பு!
மேலும், இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் கனமழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இதனால் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜூலை 1 முதல் 3ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.