தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கனமழை:
மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சில நாட்களாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு அதிகமான வெப்பம் நிலவி வந்தது. கூடுதல் வெப்பச்சலனம் காரணமாக ஒவ்வொரு இடங்களில் மிதமான மழை பொழிவும் இருந்து வருகிறது. மேலும், சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அவ்வப்போது சில பகுதிகளில் மழை பொழிவு இருந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக ஓரிரு மாவட்டங்களில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்துவாங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களை தொடர்ந்து சில மாவட்டங்களில் லேசான மழை பொழிவு இருக்கும் எனவும், ஓரிரு இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்கு – வங்கியில் புதிய அறிவிப்பு!
கூடுதல் வெப்பத்திற்கு ஏற்ப மழை பொழியும் இருந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கடலோர மாவட்டங்களில் அதி வேகத்தில் காற்று வீசும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 26,27,28 ஆகிய நாட்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மிதமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.