தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

0
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது மேற்கு பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கன மழை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது சில மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்து வருகிறது. மேலும், சில மாவட்டங்களில் மிதமான மழை பொழிவும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது. இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மட்டும் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் தென்மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் கனமழை பெய்து வருகிறது.

Exams Daily Mobile App Download

அதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபட்டால் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஐந்து மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளதாகவும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசில் 6000+ காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

இதேபோல நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மதுரையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் இன்றிலிருந்து வரும் ஜூலை 4 ஆம் தேதி வரைக்கும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!