தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் சில நாட்களாக பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகரில் நாளை (ஜூன் 29) கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 28) நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Exams Daily Mobile App Download
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக அடுத்த மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வருகிற 2 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீனவர்களுக்கு எச்சரிக்கை 2 ஆம் தேதி வரை விடப்பட்டுள்ளது. ஆந்திரா கடலோர பகுதி, அதனை ஒட்டி உள்ள வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்