தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தின் மேல்‌ நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தினால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழையும், ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றும் அடிக்க கூடும் என்ற தகவலும், இதனால் மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விடுப்பு பற்றியும் சென்னை வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌

தமிழக பகுதியின் மேல்‌ நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று ஜூன் 11 தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும், நாளை ஜூன் 12ல் வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம்‌, தர்மபுரி மற்றும்‌ கிருஷ்ணகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும் பெய்யக்கூடும்‌. இதை தொடர்ந்து மேலும் நாளை ஜூன் 12, ஜூன் 13 மற்றும் ஜூன் 14, 15ந் தேதிகளிலும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தகவல் வெளியாகியுள்ளது.

TN TET தேர்வெழுத விண்ணப்பித்து உள்ளோர் கவனத்திற்கு – தயாராவது எப்படி? சில டிப்ஸ்!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும், அந்நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 38-39 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

இன்றைய நாளான ஜூன் 11ல் தென்மேற்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், மன்னர் வளைகுடா மற்றும் தென்மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளிலும், அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளிலும், பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும், வட கேரளா மற்றும் கர்நாடகா கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும் வீசக்கூடும்‌.

மேலும், ஜூன் 12 மற்றும் ஜூன் 13ல் தென்மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்தும், கர்நாடகா கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ இலட்சத்தீூவு ஆகிய பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

அது போல ஜூன் 15 அன்றும் தென்மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மேற்கு  திசையிலிருந்து மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. தெற்கு கேரளா கடலோரப்பகுதிகள்‌, குமரிக்கடல்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. இவ்வாறு மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!