தமிழகத்தின் 2 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று இரண்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் எனவும், 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி
மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் அதி கனமழை பெய்து வருகிறது. அதாவது, ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைப்பொழிவு, மேலும் சில இடங்களில் அதி கனமழையும் பெய்து வருகிறது. அதிலும், நீலகிரி, கோவை, தேனி போன்ற மாவட்டங்களில் தான் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதே போல இன்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், தேனி, திண்டுக்கல், தென்காசி போன்ற மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல நாளையும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைப்பொழிவு இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியீடு? முழு விபரம் இதோ!
சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அவ்வப்போது சில பகுதிகளில் லேசான மிதமான மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களை பொறுத்த வரைக்கும் அவ்வப்போது லேசான மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.