தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அதிகமான வெப்பநிலை நிலவி வருவதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் எந்தாண்டுக்கும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு தான் அதிகமான வெப்பநிலை நிலவி வருகிறது. கூடுதல் வெப்பசலனத்தின் காரணமாக அவ்வப்போது பல பகுதிகளில் லேசான மழைப்பொழிவு இருந்து வருகிறது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. மேலும் இடி மின்னல் ஏற்படும் சமயங்களில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் நாளை சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இந்திய தபால் துறையில் GDS வேலை – 38,926 காலிப்பணியிடங்கள் || 10வது தேர்ச்சி போதும்..!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக இரண்டு முதல் மூன்று டிகிரி வரைக்கும் வெப்பநிலை இருக்க கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசும் இருக்கக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.