தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அசானி புயல் காரணமாக இன்று முதல் மே 14 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “அசானி” தீவிர புயல் இன்று (மே 10) காலை 8 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று இரவு வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக் கூடும். அதன்பிறகு வடக்கு- வடகிழக்கு திசையில் வடஆந்திரா -ஓரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்க நகரக் கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து இந்த புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதனை தொடர்ந்து, நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனை தொடர்ந்து, மே 12 ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து உள்ளனர்.
Accenture நிறுவனத்தில் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு – தகுதி, பணியிடம் உள்ளிட்ட விவரங்கள் இதோ!
அதனை தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்யக்கூடும் என்றும் தெரிவித்து உள்ளனர். அதன் பின்னர், மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது மே 10 (இன்று), 11, 12 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.