தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
வங்கக்கடலில் உருவாகி உள்ள அசானி புயலால், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 மாவட்டங்களில் மழை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “அசானி” புயல் மே 8ம் தேதி மாலை தீவிர புயலாக வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து மே 9 காலை 08:30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இதையடுத்து நேற்று ‘அசானி’ தீவிர புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடற்கரை அருகே வலுவிழந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (மே 13) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு!
மேலும் மந்தவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. மேலும் வங்கப் பெருங்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், இன்று பிற்பகலுக்குள் புயல் காக்கிநாடா-விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.