தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை – வானிலை அறிக்கை வெளியீடு!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை - வானிலை அறிக்கை வெளியீடு!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை - வானிலை அறிக்கை வெளியீடு!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை – வானிலை அறிக்கை வெளியீடு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்து இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை தகவல்‌:

தமிழகம்‌ மற்றும்‌ கடலோர ஆந்திரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 29.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, கரூர்‌, ஈரோடு, நாமக்கல்‌, திருச்‌சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌,ராணிப்பேட்டை மற்றும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30.08.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, கரூர்‌, ஈரோடு,நாமக்கல்‌, திருச்‌சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்‌, திருப்பத்தார்‌, வேலூர்‌,ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி,
விருதுநகர்‌ மற்றும்‌ தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

31.08.2022 மற்றும்‌ 01.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, கரூர்‌, நாமக்கல்‌, திருச்சிராப்பள்ளி,சேலம்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

02.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

வங்கி சேவைகள் முதல் பெட்ரோல் விலை வரை – செப்.1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

29.08.2022: குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. கேரள கடலோரப்பகுதிகள்‌, லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டியதென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

30.08.2022: கேரள கடலோரப்பகுதிகள்‌, லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

31.08.2022: குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, மற்றும்‌ இலங்கையை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. கேரள கடலோரப்பகுதிகள்‌, லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டியதென்‌கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

01.09.2022: குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, மற்றும்‌ இலங்கையை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. கேரள கடலோரப்பகுதிகள்‌, லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டியதென்‌கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

02.09.2022: குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, மற்றும்‌ இலங்கையை ஓட்டியதென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. கேரள கடலோரப்பகுதிகள்‌, லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டியதென்‌கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!