தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்றும், அடுத்த 5 நாட்களும் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

வானிலை:

தமிழகத்தில் கடந்த சில வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையானது இன்றும் அடுத்து 5 நாட்களும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அது குறித்து வெளியான அறிக்கையில் தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

29.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல்‌, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும்‌
திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

30.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.54000 சம்பளத்தில் அரசு வேலை – தேர்வு கிடையாது

31.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும், சேலம்‌, நாமக்கல்‌, திருச்‌சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை முதல்‌ மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, தேனி, திண்டுக்கல்‌, கரூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளுர்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்‌, அரியலூர்‌, மயிலாடுதுறை, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

01.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும், விழுப்புரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை முதல்‌ மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருச்சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர்‌, சென்னை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு
இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

02.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், தேனி, திண்டுக்கல்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தார்‌, வேலூர்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மற்றும்‌ சென்னை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை:
  • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின்‌ ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்‌.
  • அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 – 27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.
  • மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!