தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை தகவல்!
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை என்பதால் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை:
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அவ்வப்போது சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் முதலிய பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மற்ற இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, தமிழகத்தில் திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றை போலவே நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்க்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆசிரியர் பணி நியமனத்தில் ‘வரன்முறை’ செய்ய கூடாது? உயர்நீதிமன்ற விளக்கம்!
மேலும், தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களில் கன மழையும், ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைப்பொழிவும் இருந்து வருவதால் தமிழகம் முழுக்க கடுமையான குளிர் நிலவும் என வானிலை ஆய்வு அறிக்கை வெளியிட்டதாக சமூக வலை பக்கங்களில் தவறான செய்தி பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் யாரும் இது போன்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என சென்னை வானிலை இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.