தமிழகத்தின் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அலர்ட்!

0
தமிழகத்தின் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அலர்ட்!
தமிழகத்தின் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அலர்ட்!
தமிழகத்தின் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அலர்ட்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று பல மாவட்டங்களில் கனமழை பலமாக பெய்யும் என்று வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கனமழை:

தமிழகத்தில் கடந்த வாரம் சிட்ரங் புயல் காரணமாக பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தென் மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, இராமநாதபுரம்‌, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, அரியலூர்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக அசீம் பக்கம் திரும்பிய பிக்பாஸ் வீடு – குழப்பத்தில் அசிம்! வறுத்தெடுக்கும் கமல்!

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

இதை தவிர அடுத்த 2 முதல் 3 நாட்கள் தமிழகம் மாற்று புதுவையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல திட்டமிட்டிருந்தால் கவனமாக சென்று வர அறிவுறுத்தப்படுகிறார்கள். மாநில தலைநகரான சென்னையில் இன்று வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மீனவர்களுக்காக எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!